search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாரூர் தீவிபத்து"

    திருவாரூர் அருகே சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்ததில் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அபிவிருத்தீஸ்வரத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் மேனகா (வயது 35). இவர் அபிவிருத்தீஸ்வரத்தில் விவசாய வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்தநிலையில் மேனகா கடந்த 1- ந்தேதி தனது வீட்டில் சமையல் செய்தார். அப்போது அவரது சேலையில் தீப்பிடித்துள்ளது. தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து மேனகாவை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த மேனகா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மேனகாவின் தாயார் சாவித்திரி கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவாரூர் பழைய ரெயில் நிலையம் அருகே 3 கடைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
    திரூவாரூர்:

    திருவாரூர் பழைய ரெயில் நிலையம் அருகே உள்ள வி.ஆர்.எம் சாலை வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும்.

    இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பேக்கரி கடையில் மின் கசிவு காரணமாக தீ பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் தீ விபத்தை தடுக்க முயற்சி மேற்கொண்டனர். அருகில் இருந்தவர்களும் தீயை அணைக்க முயன்றனர்.

    ஆனால் தீ மளமளவென பிடித்து அருகிலிருந்த தையற்கடை, செருப்புக் கடைகளுக்கும் பரவியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் திருவாரூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தின் போது பேக்கரி கடையில் இருந்த கேஸ் சிலிண்டர் உடனடியாக அகற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக பேக்கரி, தையற்கடை, செருப்புக்கடை ஆகியவற்றிலுள்ள ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

    இந்த விபத்து குறித்து திருவாரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×